>
Showing posts with label புதிய வலைப்பதிவு. Show all posts
Showing posts with label புதிய வலைப்பதிவு. Show all posts

Thursday, April 16, 2009

புரிந்துகொள்ள முடியவில்லை

சில சமயங்களில், வலைப்பூ பட்டறைகளுக்குப் போயிருக்கலாமே என்று வருத்தப்படும்படியாக ஏதாவது நடந்துவிடுகிறது. நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்து ஒரு வலைப்பூவை ஆரம்பித்தோம். அதில் பதிவுகளை இட்டோம். தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுக்கவும் செய்தோம். அதென்னவோ தெரியவில்லை... தமிழ்மண முகப்பில் சிறிது நேரமே பதிவு தெரிந்தது. பிறகு மறைந்தே போயிற்று. என்னவாயிற்று என்றே தெரியவில்லை. தவிர, கடைசியாக இட்ட இடுகை மட்டுமே தமிழ்மணத்தில் தெரிகிறது. ஏனையவைகளுக்கு கருவிப்பட்டையில் 'அனுப்பு'என்பதையே காணவில்லை. எங்கேயென்று அனுப்புவது:( என்னமோ ஒன்றும் புரியவில்லை. இந்தப் பதிவைக்கூட ஒரு பரீட்சார்த்தமாகவே இட்டுப்பார்க்கிறேன். வாங்க. ... வந்து ஏதாவது வழி சொல்லிவிட்டுப் போங்க.

-தமி்ழ்நதி